×

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

பட்டுக்கோட்டை, ஏப்.8: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மற்றும் பேராவூரணி சட்டமன்றத்தொகுதி வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மொத்தம் 345 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதேபோல் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மொத்தம் 315 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையமான பட்டுக்கோட்டை அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் ஸ்ட்ராங் ரூம் உள்ளே வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார்சவுகான், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஐவண்ணன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.ஸ்ட்ராங் ரூம் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய சிறப்பு காவல் படையினரும், மூன்றாவது அடுக்கில் சட்டம் ஒழுங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Pattukkottai ,
× RELATED பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில்...