×

மீனவர்களுடன் கடலோர காவல்படையினர் கலந்துரையாடல்

அறந்தாங்கி, ஏப்.8: மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ சமுதாய மக்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மணமேல்குடி மீன்வளத் துறை ஆய்வாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டபம் கடலோர காவல்படையின் பிரதான் அதிகாரி சீனிவாசன், உத்தம் அதிகாரி யூசிங், பிரதான் நேவிக் வினோத்குமார், மீன்வள சார் ஆய்வாளர் பெருமாள், மீன்வள மேற்பார்வையாளர் செல்வேந்திரன், மீன்வள மேற்பார்வையாளர் விஜயபாலன் ஆகியோருடன் கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போதுபாதுகாப்பு சாதனங்களான மற்றும் அடையாள அட்டை படகு ஆவணங்கள் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பெண்ணாகரம் கடற்பகுதியில் மரக்கன்று நடப்பட்டது

Tags : Coast Guard ,
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...