×

வாங்கல் அருகே வாக்குசாவடியில் இடையூறு ஒன்றியகுழு தலைவர் மீது வழக்கு

கரூர், ஏப். 8: கரூர் வாங்கல் அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அதிமுகவை சேர்ந்த யூனியன் சேர்மன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாங்கல் பகுதி விஏஒ ஆனந்த் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: கரூர் வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியில் கரூர் யூனியன் சேர்மன் பாலமுருகன் என்பவர் வாக்குச்சாவடிக்குள் நீண்ட நேரம் நின்று வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், வாங்கல் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vangal ,
× RELATED கரூர் ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்