×

ஆண்டிபட்டியில் உணவக ஊழியர் மீது தாக்குதல்

ஆண்டிபட்டி, ஏப். 8: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் தேனியில் உள்ள தனியார் உணவகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தேர்தலை முன்னிட்டு இவர் அக்கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த அதிமுக கட்சியினர், ராஜ்குமாரை திமுகவிற்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜ்குமார் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அதிமுகவை சேர்ந்த செல்வம், அஜித், ராஜேஸ், பாக்கியராஜ், செந்தில் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...