திருவில்லிபுத்தூர், ஏப்.8: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், துணை தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜூன்கலசலிங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சுவாமிநாதன், முனைவர் ராஜ்கமல், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் நாகராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டிஆர்டிஓ (லைப் சயின்ஸ்) இயக்குனர் ஏ.கே.சிங் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் மனோஜ் பாத்தியா, ஐபிஎம் புதிய ஆராய்ச்சி கல்வி மைய இயக்குனர் விதல் மாத்தியால்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் வாய் பேசாத 51 பேருக்கு பிஎச்டி, எம்பில் பட்டங்கள் உட்பட விழாவில் 2124 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்வித் துறை இயக்குநர் முனைவர் கோடீஸ்வர ராவ் தலைமையில் பேராசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.