×

கோவையில் இருந்து ஓட்டு போட வந்த வாலிபர் மர்மச்சாவு

திருமங்கலம், ஏப்.8: திருமங்கலம் ராஜபாளையம் ரோடு பிரிவில் உள்ள பொதுபணித்துறைக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அருகேயிருந்த அவரது உடமைகளை சோதனை செய்து பார்க்கையில் ஆதார்கார்டு கிடைத்தது. அதில் இருந்த முகவரியில் போலீசார் தொடர்பு கொண்டு பேசியதில் உயிரிழந்தவர் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த கணேசன் சங்கர்ராஜ்(36) என்பது தெரிந்தது. இவர் கோவையில் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கணேசன் சங்கர்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடலை மீட்டு திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Marimachavu ,Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்