×

காதல் மனைவி முன் தீக்குளித்த லாரி டிரைவர் பலி திண்டுக்கல்லில் குடும்ப பிரச்னையில் விபரீதம்


திண்டுக்கல், ஏப். 8:  திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்னையில் காதல் மனைவி முன்பு தீக்குளித்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் சீலப்பாடி அருகேயுள்ள கேஆர்.நகர் பூங்கொடையை சேர்ந்தவர் செல்வராஜ் (25). லாரி டிரைவர். இவரது மனைவி திரிபுரஜோதி. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் தனது அம்மாவுடன் சேர்ந்து கோயிலுக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துள்ளார். அதற்கு திரிபுரஜோதி வர மறுத்து விட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த செல்வராஜ் கடந்த ஏப்.2ம் தேதி தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் செல்வராஜ் வீதியில் ஓடினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பகத்தினர் ஓடி வந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dindigul fire ,
× RELATED திண்டுக்கல்லில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து