×

ஓசூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

ஓசூர், ஏப்.8: ஓசூர் மாநகர பகுதியில் தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது. ஓசூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் வாட்டி வதைத்து வருவதால், வெப்பத்தைத் தணித்துக் கொள்ள பொதுமக்கள், தொழிலாளர்கள் தர்பூசணி பழத்தை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். ஓசூர் பகுதியில் விற்பனை செய்ய ஆந்திரா மற்றும் தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியில் இருந்தும் லாரிகள் மூலம் தர்பூசணி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ ₹25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...