×

மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

உடுமலை,ஏப்.8: பொறுப்பாறு, ஆத்துமலை, கோடந்தூறு ஆகிய பகுதிகளில் 300 வாக்காளர்களும் தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கே மிகுந்த ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலின்போது நகர்ப்புற கிராமப்புற மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கோடந்தூர், பொறுப்பாறு, ஆத்து மலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய மலை கிராம மக்கள் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கே சொந்த செலவில் வாகனம் அமர்த்தி மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மலைக்கிராம மக்கள் 100 சதவீதம் வாக்களித்தது தமிழகத்திலேயே இதுவே முதல் முறையாகும்.

Tags : Hill ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்