×

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

குன்னூர், ஏப்.8: குன்னூரில் கடந்த 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் வெளிநாட்டு மரங்களான ஜெகரண்டா பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்’ உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை இங்கு நடவு செய்தனர். இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட ஜெகரண்டா மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம். தற்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறமும் ஜெகரண்டா மலர்கள்  பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.மேலும் பூக்களின் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Tags : Coonoor-Mettupalayam road ,
× RELATED நீலகிரியில் புதிதாக உருவாகிய நீர்வீழ்ச்சிகள்