×

ஆலப்புலா-தன்பாத், எர்ணாகுளம்-பெங்களூரு சிறப்பு ரயில்கள்

கோவை, ஏப். 8:  கோவை-வடகோவை இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2 கோவை ரயில்கள், 5 நாள்களுக்கு கோவை ரயில் நிலையம் செல்லாமல், இருகூர்-போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோவை-வடகோவை ரயில் நிலையம் இடையே பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 8,10,12,14,17ம் தேதிகளில் ஆலப்புலா-தன்பாத் சிறப்பு ரயில்  மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 2 ரயில்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர்-போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளன. இதனால், பீளமேடு, சிங்காநல்லூர் நிலையங்கள் வழியாக இந்த நாட்களில் இந்த ரயில்கள் இயக்கப்படாது. இந்த  ரயில்களில் பயணிக்க, பயணிகள் இருகூர் அல்லது போத்தனூர் நிலையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Alleppey ,Dhanbad ,Ernakulam ,Bangalore ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது