×

கோவில்பட்டியில் ராதா மாதவ திருக்கல்யாணம்

கோவில்பட்டி, ஏப்.8: மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், உலக மக்கள் அனைத்து வளமும், நலமும் பெற்று வாழ கோவில்பட்டியில் ஆண்டுதோறும் ராதா மாதவ திருக்கல்யாண வைபவம் பஜனாம்ருத மண்டலியினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் செண்பகவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள காயத்ரி வித்யாலய திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது.3ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு அஷ்டபதி பஜனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நாம சங்கீர்த்தனத்துடன், செண்பகல்லியம்மன் கோயில் ரதவீதிகளில் ராதா கிருஷ்ணர் ஊர்வலம், இரவு 9 மணிக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. மறுநாள் 4ம் தேதி காலை 8 மணிக்கு உஞ்ஜவிருத்தி, 10 மணிக்கு சீர் கொண்டு வருதல் மற்றும்  ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம், ஆஞ்சநேய உத்ஸவம் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aurada Madhava Thirukkalyanam ,Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா