திருவெறும்பூர், ஏப்.5: திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இறுதிகட்ட பிரச்சாரத்தை துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் நிறைவு செய்தார்.
திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை திருவெறும்பூர் கடைவீதியில் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் அப்போது பேசியதாவது: திருவெறும்பூர் தொகுதியில் 5 ஆண்டுகளாக உங்களோடு பயணித்துள்ளேன். உங்களுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு திட்டத்தையும் போராடிப் போராடித்தான் செய்ய வேண்டியிருந்தது. தற்போது தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார்.