×

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

ராஜபாளையம் , ஏப். 5: ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொகுதி முழுவதும் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் நேற்று ராஜபாளையம் தொழிலதிபர் குவைத்ராஜாவை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து ஆட்டோவில் சென்று வயல்வெளியில் வேலை செய்யும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நேற்று மாலை தளவாய்புரம் பஸ்நிலையம், செட்டியார்பட்டி, அரசரடி, முகவர் காமராஜர் சிலை, முத்துசாமிபுரம், சேத்தூர், ராஜபாளையம் காந்தி கலைமன்றம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பேசியதாவது: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நான் கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை ஒரு வளமான தொகுதியாக உருவாக்க வாக்காளர்கள் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Rajendrapalaji ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...