×

திருவில்லிபுத்தூரில் அருகே பாரில் பதுக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஏப். 5 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வருகின்றனர். இந்நிலையில் திருவில்லிபுத்தூர் ஈஞ்சர் விலக்கு அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு எஸ்ஐ முஜிபுர் ரகுமான் தலைமையில் சென்ற போலீசார் பாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 432 குவார்ட்டர் பாட்டில், 83 பீர் பாட்டில்கள் என மொத்தம் 515
 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மது பாட்டில்களை முறைகேடாக டாஸ்மாக் பாரில் விற்பனை செய்து வந்த மாயக்கண்ணனைகைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...