×

சிவகாசி நகரில் வீதி, வீதியாக காங்கிரஸ் வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்


சிவகாசி, ஏப். 5: தமிழக சட்டமன்ற நாளை நடைபெறவுள்ளது. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் போட்டியிடுகிறார். சிவகாசி நகர் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பொதுமக்கள் திரளாக கூடி நின்றி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஜி.அசோகன் அங்கு பேசியதாவது: சிவகாசியில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நீங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருப்பது போன்று நானும் பட்டாசு தொழிலைதான் நம்பி உள்ளேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டதை போன்று பட்டாசு தொழிலை சுற்று சூழல் பாதுகாப்பு விதி 3(பி)ல் இருந்து நீக்கி நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.நேற்று மாலை திருத்தங்கல்லில இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்திற்காக திமுக கூட்டணி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அம்பேத்கர் சிலையில் துவங்கி மாரியம்மன் கோயில் அருகே முடிந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நகர பொறுப்பாளர்கள் காளிராஜன், உதயசூரியன், ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், நிர்வாகிகள், பால்ராஜ், முத்தலீப், காங்கிரஸ் நகர தலைவர் குமரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,Sivakasi ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...