×

மக்களுக்கு உதவியது திமுகதான் இறுதிக்கட்ட பிரசாரத்தில் எம்.எல்.ஏ மகாராஜன் பேச்சு


கொரோனா பாதிப்பு காலத்தில்
ஆண்டிபட்டி, ஏப். 5: கொரோனா பாதிப்பு காலத்தில் மக்களுக்கு உதவியது திமுகதான் என இறுதிக்கட்ட பிரசாரத்தில், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ மகாராஜன் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன், தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை ஆண்டிபட்டியில் முடித்தார். நகரில் உள்ள சக்கம்பட்டியில் இருந்து முக்கிய வீதிகளில் வழியாக,  பஸ்நிலையம் வரை ஊர்வலமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் மகாராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பஸ்நிலையம் அருகே திமுக வேட்பாளர் மகாராஜன் பேசுகையில், ‘கொரோனா பாதிப்பு காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது கொடுக்காமல் பொங்கல் பண்டிகை நேரத்தில் ரூ.2500 கொடுத்தார்கள். அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் அதிமுக அரசு மக்களை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கியது திமுகதான் என்று பேசினார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக கட்சியினர் மற்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி