×

மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அதிமுக ஆட்சியை தூக்கி எறிய வாக்காளர்கள் தயாராகிவிட்டனர் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு


திருப்புத்தூர், ஏப்.5: மத்திய பாஜ அரசுடன் கூட்டுசேர்ந்து கொண்டு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுவரும் அதிமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர் என்று திருப்புத்தூரில் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எம்ஏ, 18 வார்டுகளிலும் நேற்று திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருக்கு மக்கள் சால்வை, மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களின் நலன்கருதி எந்த நலத்திட்டங்களும் நடைபெறவில்லை. மாறாக தன்னை தேர்ந்தெடுத்த மக்களை வாட்டி வதைக்ககூடிய நிலையில் செயல்பட்டுள்ளது

அதிமுக அரசு. அதிமுக அரசு பாஜவுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளது. இதுபோன்று மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அதிமுக ஆட்சியை தூக்கி எறிய வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.
மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமானால், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி மலர, நீங்கள் ஒவ்வொருவரும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : AIADMK ,DMK ,Periyakaruppan MLA ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...