×

கொடைக்கானலில் ஈஸ்டர் பன் விற்பனை அமோகம்

கொடைக்கானல், ஏப். 5: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்து எழுவதை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இந்த திருநாளில் வெளி நாடுகளில் கிறிஸ்தவர்கள் தங்களது நண்பர்களுக்கு ஈஸ்டர் முட்டை வழங்குவார்கள். கொடைக்கானல் நகர் பகுதியில் ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் பன் வழங்கப்பட்டது. பேக்கரி கடைகளில் இந்த ஈஸ்டர் பன் விற்பனை அமோகமாக நடந்தது.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்