×

மேற்கு தாம்பரம் பகுதிகளில் கரிகாலன் இறுதிகட்ட பிரசாரம்


தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மாலை மேற்கு தாம்பரம் பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் கடந்த 5 ஆண்டுகள் தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். எனவே, அந்த பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் செய்திட, எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக ஆட்சி அமைந்தவுடன், சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், சுகாதாரமான மருத்துவமனை, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட திட்ட பணிகளை செய்வேன்.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் என்னை எந்த நேரத்திலும் எளிதாக அணுகி, அவர்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்’ என்றார். பிரசாரத்தின் போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், அபயம் லெமூரியர், அமமுக தாம்பரம் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், அமமுகவை சேர்ந்த அருள் கென்னடி, கோரல் வெங்கடேசன், ஆர்.ஜி.ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் மல்லிகா ராஜேந்திரன், செல்லப்பன், ராஜேஷ், சிவகுருநாதன், தேமுதிகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சதீஷ், ரவிக்குமார், அரிமா.எஸ்.மாலதி, சரவணன், அபயம் ஜெயகாந்தன் உட்பட அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : West Tambaram ,
× RELATED ரூ.4 லட்சம் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.81 ஆயிரம் அபேஸ்