×

திருப்பூர் மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா

திருப்பூர், ஏப். 5:  திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 105பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 105பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆயிரத்து 653ஆக உயர்ந்துள்ளது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 62 வயது ஆண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 227ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 42பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 533பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18,893பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupur ,
× RELATED மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி