×

உடுமலை கிளை நூலகத்தில் கபசுர குடிநீர் வழங்கல்

உடுமலை, ஏப். 5: உடுமலை  உழவர்சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2-ல், கொரோனா தொற்றை  எதிர்க்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர்  பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.உடுமலை அரசு சித்த மருத்துவ  பிரிவு, நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ் வழிகாட்டுதலின்பேரில் இது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  நூலகர் கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பொருளாளர் சிவகுமார், ஆலோசகர்  அய்யப்பன் முன்னிலை வகித்தனர். 400 பேருக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் செய்திருந்தனர்.

Tags : Kapasura ,Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...