×

அனைத்து பகுதியிலும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ உறுதி

அரவக்குறிச்சி. ஏப் 5: அரவக்குறிச்சி தொகுதி மறவா பாளயம், பரமத்தி, தென்னிலை, சின்னதாரபுரம், வேலம்பாடி அண்ணாநகர், பள்ளபட்டி கடைவீதி, குரும்பபட்டி இந்திரா நகர், வெஞ்சமால் கூடலூர், புங்கம்பாடியுடன் தொகுதி முழுவதும் தெருக்களிலும், வீடு வீடாகவும்தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியாக அரவக்குறிச்சி கடை வீதியில் பேரணியுடன் மாலையில் இறுதி நேர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசியதாவது, அனைத்து பகுதியிலும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு பெண்கள் உள்ளிட்ட 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும், கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும்,அரசு டவுன் பஸ்ஸில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், காஸ் சிலிண்டருக்கு ரூ 100 மானியம் வழங்கப்பம், அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ 4000 கரோன நிவாரண நிதி வழங்கப் படும் என பல்வேறு சலுகைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை (6ம் தேதி)நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தி, அவரை முதல்வராக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன் என்றார். வேட்பாளருடன் எம்பி ஜோதிமணி, திமுக ஒன்றியச் செயலாளர்கள்,எம்எஸ் மணியன், மணிகண்டன்,பேருர் செயலாளர்கள் அண்ணாதுரை, தோட்டம் பசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags : Aravakurichi ,DMK ,Monjanur Ilango ,Cauvery ,
× RELATED பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி...