×

நாகையில் 9,414 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

நாகை,ஏப்.5: நாகை மாவட்டத்தில் 9,414 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டத்தில் கடந்த 3 ம் தேதி வரை 9248 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (4 ம் தேதி) 77 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்தவர்கள் 3ம் தேதி வரை 89 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று (4 ம் தேதி) புதிதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. எனவே நாகை மாவட்டத்தில் இதுவரை 9,414பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ம் தேதி வரை 425 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 பேர் நோய் தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் இறந்துள்ளார்.

Tags : Nagaland ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...