×

மயிலாடுதுறையில் சாலையில் ஓடும் கழிவுநீர் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஏப்.5: மயிலாடுதுறையில் கடந்த ஓராண்டாக பாதாள சாக்கடை சாலையில் வழிந்து நகர் முழுவதும் அதை சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது கடந்த நான்கு மாதமாக முழுவதும் பாதாள சாக்கடை நீர் சாலைகளில் வெளியேறி குளம் குட்டை மழை நீர் வடிகால் போன்றவற்றில் தேங்கி நிற்கிறது, இதனால் நகர் முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

நேற்று மதியம் மயிலாடுதுறை எடத்தெருவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிமகாராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கே பாதாள சாக்கடை நீர் வழிந்து சாலை முழுவதும் சென்றது அப்பகுதி மக்கள் நடமாட முடியாத அளவுக்கு இருந்ததைக் கண்ட அவர்கள் திடீரென்று அப்பகுதியில் நின்று கண்டன முழக்கம் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...