×

கந்தர்வகோட்டை தொகுதியில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா ஜரூர் அதிகாரிகள் மெத்தனம்

கறம்பக்குடி, ஏப்.5: சட்டமன்ற தேர்தல் நாளை 6ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வேட்பாளர்கள், மனுதாக்கல் செய்த நாளில் இருந்து நேற்று வரை இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் திறந்த வேனிலும், வீதிவீதியாக நடந்து சென்றும் தங்களுக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினர்.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவுக்கு இந்த முறை தோல்வி பயத்தில் உள்ளது. இதனால் கட்சியின் மேலிடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தொகுதி முழுவதும் பனம் பட்டுவாடா மறைமுகமாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோயில் ஆகிய ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி உதயகுமாருக்கு ஆதரவு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய நேற்று முன்தினம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஏற்கனவே தினகரனில் தகவல் தெரிவித்திருந்தோம். அதன்படி நேற்று அதிகாலை முதல் மூன்று ஒன்றியகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிமுக நிர்வாகிகள் மூலமாக வாக்காளர்களை மறை முகமாக தனியாக அழைத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட 25 பேர் வீதம் அதிமுக நிர்வாகியிடம் ஓட்டுக்கு ரூ.500 வீதம் பணம் விநியோகம் செய்கின்றனர். இதனை பறக்கும் படையினர் கண்டு கொள்ளவில்லை என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.

Tags : Kandarwakottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை