×

செய்யாறு அருகே ஆசைவார்த்தை கூறி பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ வைத்ததால் பரபரப்பு

செய்யாறு, ஏப்.5: செய்யாறு அருகே பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை `வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' வைத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் ரமணா(20). இவர் செய்யாறு அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார்.இந்நிலையில், ரமணா கடந்த 6 மாதமாக பள்ளி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் தொந்தரவு கொடுத்தாராம். ெதாடர்ந்து, தனக்கு போலீஸ் வேலை கிடைக்கப் போகிறது என கூறி மாணவியை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20ம் தேதி வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது, அங்கு சென்ற மாணவன் ரமணா, மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை மாணவிக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது.
சில தினங்கள் கழித்து அந்த வீடியோவை நண்பர்களுக்கும் ரமணா அனுப்பியுள்ளார். மேலும், பலாத்கார வீடியோவை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பகிரங்கமாக வைத்தாராம். ஸ்டேட்டஸை கண்டு ரமணாவுடன் வாட்ஸ்அப் நட்பில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளி மாணவி மற்றும் அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து ஸ்டேட்டஸ் வைத்த கல்லூரி மாணவர் ரமணாவை கைது செய்தனர். பின்னர் அவரை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Seiyaru ,
× RELATED கல்குவாரி அலுவலகம் சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யாறு அருகே