×

செங்கம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.40 லட்சம் பறிமுதல்

செங்கம், ஏப்.4: செங்கம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.40 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். செங்கம்- பரமனந்தல் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த குப்பன்(45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் ₹1.40 லட்சம் ெராக்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணம் எதுவும் குப்பனிடம் இல்லை. எனவே, அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் மனோகரனிடம் ஒப்படைத்தனர்.

Tags : Sengam ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி