×

செய்யாறு அருகே நிதிநிறுவன ஊழியரிடம் ₹1.97 லட்சம் பறிமுதல்

செய்யாறு, ஏப்.4: செய்யாறு அருகே நிதிநிறுவன ஊழியரிடம் ₹1.97 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். செய்யாறு தொகுதி தேர்தல் பறக்கும் படை நரசிம்ம பல்லவன் தலைமையிலான குழுவினர் ஆரணி சாலையில் தண்டரை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வைந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். பைக்கில் வந்தவரிடம் ₹1.97 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், செய்யாறு தாலுகா வடதின்னலூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பதும், தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியர் என்பதும் தெரியவந்தது. ஆனால், அவர் கொண்டு வந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், ₹1.97 லட்சத்தை பறிமுதல் செய்து தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான திருமலையிடம் ஒப்படைத்தனர்.

Tags : Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...