×

சாத்தூரில் மது விற்ற 2 பேர் கைது


சாத்தூர், ஏப். 4: சாத்தூர் டவுன் போலீஸ் எஸ்ஐ பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது. சாத்தூர் போஸ்ட் ஆபீஸ் சந்து அருகில் மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிக்கனி(42) என்பவரிடமிருந்து 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை எஸ்ஐ ராமசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது வல்லம்பட்டியில் வீட்டின் அருகே மதுபாட்டில் விற்ற மகேஸ்வரன்(48) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : Sattur ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை