×

குமுளி எல்லைப்பகுதியில் தமிழக போலீஸ் செக்போஸ்ட் மாற்றம்


கம்பம், ஏப். 4:  குமுளியில் தமிழக போலீஸ் செக்போஸ்ட் மற்றும் கம்பம்மெட்டு எல்லைச் சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்ட காவல் நிர்வாகம், எல்லைப்பகுதியில் சோதனையை பலப்படுத்த முடிவு செய்தது. முதற்கட்டமாக குமுளியில் எல்லைப்பகுதிக்கு சுமார் ஒரு கி.மீ முன்பாக இருந்த காவல்துறை சோதனைச்சாவடி நேற்று எல்லைக்கு நேற்று மாற்றப்பட்டது. இதனால், அங்கிருந்த புறக்காவல்நிலையமும், காவல்துறை சோதனைச்சாவடியும் ஒன்றாக இயங்கும். இங்கு புறக்காவல்நிலையம் மற்றும் சோதனைச்சாவடியில் பணியாற்றிய போலீசாருடன் கூடுதலாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, தமிழக மேற்கு எல்லை கம்பமெட்டு சோதனைச்சாவடியிலும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு போலீசார் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் சுழற்சி முறையில் தமிழக, மத்திய போலீசார் சோதனைச்சாவடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Tamil ,Nadu ,Kumuli border ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...