×

திமுக ஆட்சி அமைவது உறுதி அதிமுகவின் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை திமுக வேட்பாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு


திருப்புத்தூர், ஏப். 4: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு திமுக வேட்பாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசியதாவது, தமிழக அரசு வெற்றி நடை போடுவதாக எடப்பாடி பழனிச்சாமி பொய்யான பிரசாரம் செய்கிறார். தமிழக அரசு கடன் சுமையால் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு உருப்படியான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அளிக்கவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப தயாராக இல்லை. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞரின் விரிவான காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தகை மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதற்கு மக்கள் தயாராகி விட்டனர். அப்போதுதான் நாடு நலம் பெறும் என்பதையும் மக்கள் உணர்ந்து விட்டனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர என்னை உங்கள் வீட்டு பிள்ளையாக கருதி உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார்.

Tags : AIADMK ,DMK ,Periyakaruppan ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...