×

தேர்தல் பிரசாரம் மானாமதுரையில் பட்டுவாடா தாராளம்


மானாமதுரை, ஏப். 4:  மானமதுரை பகுதி திமுகவினர் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களுக்கு முன் இங்கு வந்து ஆலோசனை நடத்திய, சிவகங்கை மாவட்ட அதிமுக பிரமுகர் அறிவுரையின்பேரில் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வழங்க முடிவெடுத்துள்ளனர். அப்பணத்தை மானாமதுரையை சுற்றியுள்ள சிலரது தோட்டங்களில் பதுக்கி வைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் கீழமேல்குடி, மூங்கில்ஊரணி, மானாமதுரை டவுன் சங்குபிள்ளையார் கோயில் பின்புறம், அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியார் மகால் என பல இடங்களில் பணம் வழங்கி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே 10 கார்களில் பிரசாரம் செய்வது, இரவு 10 மணிக்கு மேல் சுற்றுவது என விதிமுறைகளை மீறி வருகின்றனர். தற்போது பணம் கொடுப்பதையாவது தேர்தல் அலுவலர்கள் தடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்