×

ராமநாதபுரத்தில் கொரோனா தொற்று 50 ஆக உயர்வு

ராமநாதபுரம், ஏப். 4:  தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியவேளையில் கொரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வருகிறது. பிரசாரத்திற்கு வருவோர், செல்வோர் மற்றும் வேட்பாளரும் கூட முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு வரை 3,290 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8,92,780 பேர் இதுவரை பாதித்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 38 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று 50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...