×

காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பேரூர் ஆதீனத்திடம் ஆசி

கோவை, ஏப் 4: கோவை தெற்கு தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தேசிய தலைவர்கள் பலர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். மேலும், மயூரா ஜெயக்குமார் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களை சந்தித்தும், மத தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்று பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும், அவரிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கோரினார். இதையடுத்து தெப்பக்குளம் பகுதிக்கு சென்று அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை மற்றும் பாதாள சாக்கடை வசதி மேம்படுத்தப்படும். தெரு விளக்குகள் சீரமைக்கப்படும். சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Mayura Jayakumar Perur Aadeen ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்