×

நகரில் மின்தடை செய்து அதிமுக பணம் விநியோகம்

மதுரை, ஏப்.4: மதுரையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு, ஆளும் கட்சியினர் பணம் விநியோகத்தில் ஈடுபட்டனர். மின்தடையால் கொசுக்கடியில் குழந்தைகள், பெரியவர்கள் அவதியடைந்தனர். மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஐயப்பன் நகர், அன்னை நகர், அன்பு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணி முதல் நள்ளிரவு வரை மின்தடை ஏற்பட்டது. 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்விநியோகம் இருப்பதும் பிறகு தடையும் என இரவு பொழுது கழிந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் கொசுக்கடியாலும், காற்று வசதியின்றியும் தூக்கத்தை இழந்து ரோட்டுக்கு வந்த சோகம் நடந்தது.இதேபோல், மதுரை நகர், பழங்காநத்தம், மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்றிரவு மின்தடை ஏற்படுத்தி, அதிமுகவினர் பணம் விநியோகம் நடத்தியதாக புகார் எழுந்தது.

Tags : AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...