அறந்தாங்கி, ஏப். 4: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன், மறமடக்கி பகுதியில் வாக்கு சேகரித்தார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலால் பொதுமக்களின் பாதிப்பை நேரில் பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்க வேண்டுமென அரசுக்கு வலியுறுத்தினர். ஆனால் அதை தமிழக முதல்வர் வழங்கவில்லை. இதனால் திமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஒரு அறிவிப்பிலேயே மக்களை காக்கும் தலைவர் யார் என்பதை நீங்கள் உணர வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.