×

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி கட்ட பிரசாரத்துக்கு இடம் ஒதுக்க செந்தில்பாலாஜி கோரிக்கை

கரூர், ஏப். 4: கரூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் கடந்த தேர்தல்களில் பெரும்பாலும் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மனோகரா கார்னர் பகுதியில் தங்களின் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்து வந்தனர்.இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மனோகரா கார்னர் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்யும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மனோகரா கார்னர் பகுதியில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்ள எந்த கட்சிக்கும் அனுமதி தரப்படவில்லை என்ற தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன், கோட்டாட்சியர் அலுவலகம் சென்று, கோட்டாட்சியர் பாலசுப்ரமணியத்திடம், தலைமை தேர்தல் பணிமனை மனோகரா கார்னர் பகுதியில் உள்ளது. எனவே, அந்த பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் செந்தில்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

Tags : Senthilpalaji ,Karur ,Governor's Office ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...