×

சிவகாசி அதிமுக வேட்பாளர் குடும்பத்தினருடன் வாக்கு சேகரிப்பு

சிவகாசி, ஏப். 3: சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் லட்சுமி கணேசன் திருத்தங்கல் நகரில் காளியம்மன் கோவில் அருகில் நேற்றுமுன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அருவருடன் அவரது குடும்பத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர் வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் சிவகாசி தொகுதியில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை கூறி வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் வாக்கு சேகரித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய நலத்திட்டங்களை பெற வாக்காளர்கள் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கோரினார். பின்னர் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் தீவிர பிரசாரம் செய்தார்.வாக்கு கேட்டு சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜ அரசு பட்டாசு தொழிலை பாதுக்க தமிழக அரசுடன் உறுதுணையாக இருக்கிறது. எனவே தற்போது உள்ள நெருக்கடி நிலை விரைவில் மாறும். எப்போதும் போல் பட்டாசு தொழில் சிறப்பாக நடைபெறும். உங்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் நிச்சயம் பணிகள் வழங்கப் படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Sivakasi ,AIADMK ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு