×

போடி அருகே ஓபிஎஸ் வாக்கு சேகரித்தபோது கடும் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி

போடி, ஏப். 3: போடி அருகே, துணை முதல்வர் ஓபிஎஸ் வாக்கு சேகரித்தபோது, போடி-தேனி மெயின்ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். போடி தொகுதி அதிமுக வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொகுதிக்கு உட்பட்ட, போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டியில் நேற்று வாக்கு சேகரித்தார்.  பின்னர் மீனாட்சிபுரம் பேருராட்சிக்குட்பட்ட  மீனா விலக்கு, துரைராஜபுரம் காலனியில் வாக்கு சேகரித்தார். இதனால், போடி-தேனி மெயின்ரோட்டில் துரைராஜபுரம் காலனியில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் அவசரமாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், டூவீலர்கள், கார்கள், மினிலாரிகள் என ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன. கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Tags : OPS ,Bodi ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி