×

ராமநாதபுரத்தில் டிஆர்ஓ வீட்டில் திருட முயற்சி

ராமநாதபுரம், ஏப். 3: ராமநாதபுரம் முகவையூரணி மேல்கரை தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (59). இவர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாளர்- நிர்வாக சீரமைப்பு துறை மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். முகவையூரணில் உள்ள இவரது சொந்தமான வீட்டில் முதுனாள் தர்மா என்பவர் இரவு காவலாளியாக உள்ளார். இவர் கடந்த மார்ச் 31ம் தேதி காலை 7 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் இரவு பணிக்கு திரும்பிய போது மகேஸ்வரன் வீட்டின் உட்புற தலைவாசல் கதவு, வீட்டிலுள்ள 2 அறை கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து காவலாளி தர்மா, மகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையிலிருந்து மகேஸ்வரன், ராமநாதபுரம் திரும்பினார். வீட்டிலுள்ள பொருட்களை சரிபார்த்த போது எந்த பொருளும் திருடு போகவில்லை. இதுகுறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில்  ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...