×

மீனவர் உரிமைகளை நிலைநாட்ட குரல் கொடுப்பேன் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உறுதி

ராமநாதபுரம், ஏப். 3:  ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் நேற்று மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான பாம்பன், பனந்தோப்பு, அக்காள்மடம், தரவைதோப்பு, குந்துகால் முகம்மதியாபுரம், சின்னபாலம், தெற்குவாடி, தங்கச்சிமடம், அய்யன் தோப்பு, அந்தோணியார்புரம், மாந்தோப்பு, தண்ணீர் ஊற்று, பேக்கரும்பு, அரியாங்குண்டு, மரைக்காயர்பட்டினம், வேதாளை, குஞ்சார்வலசை, சாத்தக்கோன்வலசை, சுந்தரமுடையான், சீனியப்பா தர்ஹா, பிள்ளைமடம், பால்குளம், அரியமான் உள்ளிட்ட இடங்களில் மீனவ மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வெற்றிக்கு சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடந்தது. மீனவ மக்கள் மத்தியில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது, ‘மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8 ஆயிரம், மழைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரம், விசை படகுகளுக்கான டீசல் மானியம் 2 ஆயிரம் லிட்டராக உயர்த்தி தேர்தல் அறிக்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இது மட்டுமின்றி மீனவர் உரிமைகளை நிலைநாட்ட குரல் கொடுப்பேன். இவை எல்லாம் நிறைவேறிட வரும் 6ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் ரவிச்சந்திர ராமவன்னி, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தவ்பீக் அலி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kadarpatcha Muthuramalingam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி