×

பொதுமக்கள் அவதி பெருங்காமநல்லூரில் அஞ்சலி செலுத்த தடை

பேரையூர், ஏப்.3: தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பெருங்காமநல்லூரில் இன்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரையூர் தாலுகா சேடபட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய மாயக்காள் உட்பட 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக பெருங்காமநல்லூரில் உள்ள ஸ்தூபியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.3ம் தேதி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.  இன்று பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பெருங்காமநல்லூரில் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உசிலம்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரி ஆர்டிஓ ராஜ்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Tags : Avadi Perungamanallur ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு