×

கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படும் திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி

கொடைக்கானல், ஏப். 3: திமுக ஆட்சி அமைந்ததும், கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படும் என பழனி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில்குமார் எம்எல்ஏ வாக்குறுதி அளித்துள்ளார். பழநி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார், கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பாச்சலூர், கடைசி காடு, நல்லூர் காடு, கே.சி.பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். அப்போது ஐ.பி.செந்தில்குமார் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்ததும், மலைப் பகுதி விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படும். கீழ் மலைப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பின் போது கீழ்மலை ஒன்றியச் செயலாளர் கருமலை பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றியப் பெருந்தலைவர் ஸ்வேதா ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,IP Senthilkumar ,MLA ,Kodaikanal hill ,
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...