×

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆட்டோ ஓட்டியபடி பிரசாரம்

திருவெறும்பூர், ஏப் 3:  வருகிற 6ம்தேதி சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். நாளை மறுதினம் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் தொமுச அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அப்போது திருவெறும்பூர் தொகுதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி காக்கி சட்டை அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டினார். பெல் கணேசா ரவுண்டான முதல் ட்ரெய்னிங் சென்டர் வரை சென்று மீண்டும் கணேசா ரவுண்டானா வரை திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை ஓட்டி வாக்கு சேகரித்தார். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவில் பேரணியாக சென்று திமுகவிற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : Thiruverumbur ,DMK ,Anbil Mahesh Poyamozhi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி