×

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அலுவலர்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு

திருச்சி, ஏப்.3: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு இன்று சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கடந்த மாதம் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொகுதி வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அப்போது சிறப்பு முகாமில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் பெரும்பாலோனோர் தடுப்பூசி போடவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் இன்று (3ம் தேதி) நடைபெறவுள்ள மறு மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்பின் போது நாட்டு நலன், சமூக நலனோடு தங்களது மற்றும் தங்களது குடும்ப நலனில் அக்கறை கொண்டு தவறாமல் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Tags : Govt-19 ,
× RELATED கொரோனாவால் இறந்தவர்களின்...