×

புளியங்குடி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி

புளியங்குடி, ஏப்.3: புளியங்குடி அருகே எலுமிச்சை தோட்டத்தை உழுதபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார். புளியங்குடி அடுத்த ரத்தனபுரியைச் சேர்ந்த முத்துசாமி மகன் செல்வகுமார்(38). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை  ரத்தனபுரி அருகிலுள்ள ஒருவரது எலுமிச்சை தோட்டத்தை ரோட்டோ வேட்டர் என்ற கருவி மூலம் உழுது முடித்துவிட்டு வெளியில் வரும்போது ரோட்டோ வேட்டர் சக்கரத்தில் செடிகள் சிக்கியதாக தெரிகிறது. அதனை எடுப்பதற்காக செல்வகுமார் குணிந்தபோது கைலி ரோட்டோ வேட்டர் சக்கரத்தில் சிக்கியதால் அவரை உள்ளே இழுத்தது.

இதில் அவரது முகம், கால்கள், தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி சென்ற உறவினர்கள் செல்வகுமார் படுகாயத்துடன் கிடப்பதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் இறந்தார்.புளியங்குடி சப் இன்ஸ்ெபக்டர் தினேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இறந்த செல்வக்குமாருக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், 2குழந்தைகளும் உள்ளனர்.

Tags : Puliyangudi ,
× RELATED தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி