×

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிமுக, பாமகவை சேர்ந்த 2 பேர் சிக்கினர் ₹47 ஆயிரம் பறிமுதல்

சேந்தமங்கலம், ஏப்.3: சேந்தமங்கலம் அருகே, வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்த ₹47,500 தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளாக சந்திரன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடபெற்று வரும் நிலையில், நேற்று இரவு 9 மணியளவில், பள்ளிப்பட்டி ஊராட்சியில்  அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக,  தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள், உடனடியாக பள்ளிப்பட்டி பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு இருவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவர்களை மடக்கிப்பிடித்த தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள்,  விசாரணை நடத்தினர். அவர்கள் அதிமுகவை சேர்ந்த  ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் அமிர்தலிங்கம் (60), பாமகவை சேர்ந்த சரத் (40) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம்  வாக்காளர்களுக்கு வழங்க அவர்கள் வைத்திருந்த ₹47,500 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : AIADMK ,Bamaga ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...