சேந்தமங்கலம், ஏப். 3: புதுச்சத்திரம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சியில், சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வண்டிபேட்டையில் டிஎஸ்பி காந்தி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.