×

ஆத்தூர் தொகுதியில் வாகன தணிக்கையில் ₹7.84 லட்சம் பறிமுதல்

ஆத்தூர், ஏப்.3: ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெங்கட்ராமன் தலைமையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது பொன்னுசாமி (32) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ₹57,160 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோபாலபுரத்தில் முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்த போது வடக்கு மஞ்சள் ராசிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவரிடம் ₹₹5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதே போல், ஆத்தூர் காந்திபுரத்தில் பறக்கும் படை குழுவினர் சரவணன் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (32) என்பவரிடம் இருந்து ₹1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. துலக்கனுரில் முருகன் என்பவரிடமிருந்து ₹1.23 லட்சம் என மொத்தம் ₹7.84 லட்சம் பறிமுதல் செய்து ஆத்தூர் தாசில்தார் வரதராஜன், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் தமிழரசி ஆகியோர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Attur ,
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...